கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும்உமக்கொப்பானவர் யார்
செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்தி சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் - உமக்கொப்பானவர் யார்
தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட - உமக்கொப்பானவர் யார்
கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
இன்னும் அற்புதம் செய்திடுவீர் - உமக்கொப்பானவர் யார்
No comments:
Post a Comment
If you like this blog please write your comment