30 Oct 2010

ஆராதனைக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே

ஆராதனைக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே
எங்கள் ஆராதனைக்குள் இன்று
வாசம் செய்கிறீர்

அல்லேலுயா ஆராதனை - 4
ஆராதனை ஆராதனை ஆராதனை - 2

சீனாய் மலையில் வாசம் செய்தீர்
சீயோன் உச்சியிலும்
கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

நீதியின் சபையில் வாசம் செய்தீர்
நீர் மேல் அசைந்தே
துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
பலிபீட நெருப்பிலே
இல்லங்கள் தோறும் வாசம் செய்தீர்
என் உள்ளத்தில் வாசம் செய்யும்

மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்
மேகங்கள் நடுவில் நீர்
நித்திய உலகில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

No comments:

Post a Comment

If you like this blog please write your comment