குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கி பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்
இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே - குயவனே
விலைபோகாத பாத்திரம் நான்
விரும்புவார் இல்லையே
விலையில்லா உம் கிருபையால்
உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத்
தம்மைப்போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடமையாக்கிடுமே- குயவனே
மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றியே
கண்டேன் இல்லை இன்பமே
காணாமல் போன பாத்திரம் என்னை
தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம் பாதம்
செல்லும் பாதையில் நடத்திடுமே - குயவனே
No comments:
Post a Comment
If you like this blog please write your comment