வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்கதரிசனம் சொல்வாரே
பெந்தகொஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடு
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும்
மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவி தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்திர சுவிகாரம் ஈந்திடும்
No comments:
Post a Comment
If you like this blog please write your comment