நீரே வழி நீரே சத்தியம்
நீரே ஜீவன் இயேசையா
உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை
நாம் நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நீர் ஒரு போதும் கைவிட மாட்டீர்
எனக்காகவே ஜீவிக்கின்றீர்
என் உள்ளத்தில் தங்கி நடத்துகிறீர்
எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
எனக்காக திரு இரத்தம் நீர் சிந்தினீர்
No comments:
Post a Comment
If you like this blog please write your comment