23 Sept 2010

என் இன்ப துன்ப நேரம்

என் இன்ப துன்ப நேரம்
நான் உன்னை சேருவேன்
நான் நம்பிடுவேன் – பாரில்
உம்மை சார்ந்திடுவேன்

நான் நம்பிடும் தெய்வம்
இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே ராஜனே
தேற்றி என்னை தாங்கிடுவார்

இவரே நல்ல நேசர்
என்றுமே தாங்கி என்னை நடத்துவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னை காத்திடுவார்

பார் போற்றும் ராஜன்
புவியில் நான் வென்றிட செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரை போல் மாறிடுவேன்

No comments:

Post a Comment

If you like this blog please write your comment