துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்
அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்
கதி உம்பர்கள் தோலும் இங்கித கருணைப் பிர தாபன் - துதி தங்கிய
மனதை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத தனார்
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மா பரிசுத்தனார் - துதி தங்கிய
திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபனார்
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ருபமதனார் - துதி தங்கிய
அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்
எபிரேயர்கள் குளம் தாவீதென் அரசற் கோர் குமாரன் - துதி தங்கிய
சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் - துதி தங்கிய
விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்
பண் ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் - துதி தங்கிய
No comments:
Post a Comment
If you like this blog please write your comment