9 Aug 2010

என் மனம் பாடும்

என் மனம் பாடும் பாடலிது தேவா
என்னுள்ளே தீரா தாகமிது நாதா
நீர் தரும் நேசம் நினைவினில் வாழும் - 2
நிலையில்லா பனிபோல என் சோகம் மாறும் - என் மனம்

நினைவெல்லாம் மலராக நீ மலர்ந்தாய்
நிம்மதி நீ கொணர்ந்தாய் - 2
கனவெல்லாம் கானல் நீரோ
நான் கண்ணீரில் வாழும் மீனோ
உன் திருவடியே என் மனம் சரணம்
உளமதிலே நீ உன் ஒளி தரனும் - என் மனம்

வழி மீது விழி வைத்து ஒளி தேடினேன்
இருளினில் நான் விழுந்தேன் - 2
நான் என்ன வாடும் பூவோ
இல்லை உன் பாதம் சூடும் பூவோ
என் மனம் நீ வா நிம்மதியை தா
என் முகம் தனிலே புன்னகையை தா - என் மனம்

No comments:

Post a Comment

If you like this blog please write your comment