5 Aug 2010

ஓசன்னா பாடுவோம்

ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா

முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்ன பாலர் பாடினார்
அன்று போல இன்றும் நாமும் ஒன்றாய் துதி பாடுவோம்

சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்

பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்

பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீ ணை யோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்

குருத்தோலை ஞாயிற்றில் நம் குரு பாதம் பணிவோம்
கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்

No comments:

Post a Comment

If you like this blog please write your comment