3 Oct 2010

என் யேசுவே உன்னை நான் மறவேன்

என் யேசுவே உன்னை நான் மறவேன் மறவேன்
எந்நாளும் உன் அருளை நான் பாடி மகிழ்ந்திருப்பேன்

உன் நாமம் என் வாயில் நல் தேனாய் இனிக்கின்றது
உன் வாழ்வு என் நெங்சில் நல் செய்தியாய் தொனிக்கின்றது
உன் அன்பை நாளும் எண்ணும் போது ஆனந்தம் பிறக்கின்றது

உன் நெஞ்சின் கனவுகளை நிறைவேற்ற நான் உழைப்பேன்
அறிவாகும் பாலங்களை உலகெங்கும் நான் அமைப்பேன்
இறையாட்சி மலரும் காலம் வரையில் இனிதாய் எனை அளிப்பேன்

No comments:

Post a Comment

If you like this blog please write your comment